Homeசெய்திகள்சினிமாலியோ 'நா ரெடி' பாடலில் நீக்கப்பட்ட சர்ச்சை வரிகள்!

லியோ ‘நா ரெடி’ பாடலில் நீக்கப்பட்ட சர்ச்சை வரிகள்!

-

லோகேஷ் கனகராஜ், விஜய் அனிருத் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் லியோ. கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி லியோ படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இது லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களின் தொடர்ச்சியாக எல் சி யு வில் இடம் பெறுமா என்பது மிகப்பெரிய சர்ப்ரைஸாகவே உள்ளது. படத்தின் முதல் பாடலான நான் ரெடி சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பு பெற்றது. அப்பொழுதே அப்பாடலின் வரிகள் சிகரெட், மது போன்ற போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பது போல உள்ளன என பல விமர்சனங்கள் எழுந்தன.

அப்பாடல் வரிகளை நீக்க கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது இப்பாடலில் இடம்பெற்றுள்ள “பத்தாது பாட்டில் நான் குடிக்க… அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…” எனும் வரிகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

MUST READ