நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தை மீசைய முறுக்கு திரைப்படத்தின் நடித்திருந்தால் ஆனந்த் என்பவர் எழுதி இயக்கி நடித்திருந்தார். மேலும் இவருடன் இணைந்து ஆர் ஜே விஜய், KPY பாலா, இர்ஃபான், பவானி ஸ்ரீ, மோனிகா, லீலா, வினோத், குமரவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ ஹெச் கா இந்த படத்திற்கு இசையமைக்க தமிழ்செல்வன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பென்னி ஆலிவர் இந்த படத்தில் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
நட்பு என்பதனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பாராட்டி வந்தனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 13-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -