Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் வருவார்... மக்களை சந்திப்பார்... நாசர் உறுதி

விஜயகாந்த் வருவார்… மக்களை சந்திப்பார்… நாசர் உறுதி

-

80-களில் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த். சினிமா மட்டுமன்றி அரசியல், மக்கள் சேவை என அனைத்து களத்திலும் வெற்றி கண்டவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவற்றில் பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திரைப்படங்களின் பட்டியலில் உள்ளன.
நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டம் என எதிலும் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவருக்கு சளி, இருமல் அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் இதனால், 14 நாட்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று அறிக்கை வௌியிட்டனர். இது ரசிகர்கள் உள்பட மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது. சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவரும், நடிகருமான நாசர் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், விஜயகாந்த் நன்றாக நலமுடன் இருப்பதாகவும், சில நாட்களாக வௌியாகிக் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்திய வண்ணம் இருப்பதாகவும் கூறினார். தலைமை மருத்துவரை சந்தித்ததாகவும், அவர் நிச்சயம் உங்களை விஜயகாந்த் சந்திப்பார் என்றும் தெரிவித்ததாக நாசர் கூறினார். அதனால், மிகைப்படுத்திய செய்திகளை பரப்ப வேண்டாம் என நாசர் கேட்டுக்கொண்டார்.

MUST READ