Homeசெய்திகள்சினிமாஇரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டியது பா.ரஞ்சித் - விக்ரமின் ‘தங்கலான்’

இரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டியது பா.ரஞ்சித் – விக்ரமின் ‘தங்கலான்’

-

- Advertisement -

இரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டியது பா.ரஞ்சித் - விக்ரமின் ‘தங்கலான்’

விக்ரம் நடித்துள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட நடித்திருந்தனர்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கித்தில் வெளியான  ‘தங்கலான்’ படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள், ட்ரைலர், டீஸர் என அனைத்தும் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த சுதந்திர தினத்தன்று (15.08.2024) தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. முதல் நாளில் ரூ.26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

முதல் நாள் வசூல் ரூ.25 கோடி- நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’

இப்படம் வெற்றிகரமாக இரண்டு வாரங்கள் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி திரையரங்கில் ஓடி வரும் நிலையில், படக்குழு சார்பில் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் இந்தி பேசும் வட மாநிலங்களில் வெளியாக உள்ளது. இதன் மூலம் வசூல் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

MUST READ