பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றி விழா விசாகப்பட்டினத்தில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியின் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தில் காவியா தாபர், மன்சூர் அலிகான் , விஜய் தேவ், ராதா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிச்சைக்காரன் 2 திரைப்படம் தெலுங்கிலும் கடந்த மே 19ல் 1500 திரையரங்குகளில் வெளியானது.
அம்மா சென்டிமெண்டை வைத்து உருவாக்கப்பட்ட பிச்சைக்காரன் முதல் பாகத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே போல பிச்சைக்காரன் 2 படம் தங்கச்சி சென்டிமென்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தெலுங்கு திரை உலகில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் 20 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் 26 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக நாளை விசாகப்பட்டினத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றி விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.