பிரபாஸ் கடைசியாக சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை கே ஜி எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு பிரபாஸ் தி ராஜா சாப் எனும் படத்தில் நடிக்கிறார்.
அதே சமயம் நடிகர் பிரபாஸ், பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898AD படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டைம் டிராவல் சயின்ஸ் ஃபிக்ஷன் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 மே 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
இந்நிலையில் சீதராமம் பட புகழ் மிர்ணாள் தாகூர் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா கல்கி படத்தில் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.