spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் வில்லனாக களமிறங்கும் பிருத்விராஜ்... மகேஷ் பாபு படத்திற்கு பேச்சுவார்த்தை...

மீண்டும் வில்லனாக களமிறங்கும் பிருத்விராஜ்… மகேஷ் பாபு படத்திற்கு பேச்சுவார்த்தை…

-

- Advertisement -
டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் மகேஷ் பாபு. தமிழில் தளபதியாக விஜய் கொண்டாடப்படுவதை போல, தெலுங்கில் மகேஷ் பாபுவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான மகேஷ்பாபு, ராஜகுமாருடு திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது நடிப்பில் புகாரி, ஒக்கடு, அத்தடு ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வௌியாகி மாபெரும் ஹிட் அடித்தன.
இறுதியாக மகேஷ் பாபு நடிப்பில் குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது. இதில் மீனாட்சி சௌத்ரி மற்றும் ஸ்ரீ லீலா நாயகிகளாக நடித்திருந்தனர். இத்திரைப்டபத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு ராஜமௌலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அண்மையில் பிரபாஸ் நடித்த சலார் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார் பிருத்விராஜ். இந்நிலையில், இத்திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளதாககூறப்படுகிறது. ஆக்‌ஷன் அதிரடியாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல நாடுகளில் நடைபெற உள்ளதாம்.

MUST READ