Homeசெய்திகள்சினிமாஒரேநாளில் வெளியாகும் பிருத்விராஜின் இரண்டு படங்கள்

ஒரேநாளில் வெளியாகும் பிருத்விராஜின் இரண்டு படங்கள்

-

பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன.

மலையாளம் மட்டுமன்றி தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் இன்று முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி அவர் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது.

இதற்கிடையே நடிகர் பிருத்விராஜ் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மோகன்லாலை வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லூசிபர் என்ற படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது லூசிபர் இரண்டாம் பாகத்தையும் அவர் இயக்கி வருகிறார். தற்போதது அவர் பாலிவுட்டில் அக்‌ஷய் குமாருடன் இணைந்து சோட்டோ மியான் என்ற படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

அதேபோல, பிருத்விராஜ் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள ஆடுஜீவிதம் படமும் ஏப்ரல் மாதம் வௌியாகிறது. பிருத்விராஜின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

MUST READ