Homeசெய்திகள்சினிமா'கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு'..... கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி!

‘கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு’….. கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி!

-

- Advertisement -

'கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு'..... கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி!முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்கள் அரசியலிலும் சினிமாவிலும் வரலாறு படைத்தவர். கலைஞர் மறைந்தாலும் அவரின் அரசியல் வரலாறும் திரை வரலாறு என்றும் மறையாது. அந்த வகையில் தான் திரைத்துறையில் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. கடைசி வரை கலைஞனாகவே வாழ்ந்து மறைந்த கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று பிரம்மாண்டமாக கலைஞர் 100 விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் ரஜினி, கமல், நயன்தாரா, சூர்யா, தனுஷ் நடித்த திரைப்படங்கள் பலரும் கலந்து கொண்டனர். 'கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு'..... கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி!அப்போது பேசிய ரஜினி, “கலைஞர் தன்னுடைய கடைசி காலம் வரை வீட்டில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் பழமையை போற்றி வந்தவர். சாய்பாபாவை சந்தித்த ஜனாதிபதியே காத்திருக்க வேண்டும் ஆனால் சாய்பாபாவை கருணாநிதியை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். கருணாநிதியிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லை பேச்சாற்றலும் இருந்தது. அவரின் பேச்சில் தெனாலிராமனின் நையாண்டியும் சாணக்கியனின் தந்திரமும் இருந்தது. பாரதியின் கோபம் இருந்தது. கலைஞரின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விஷயம்.'கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு'..... கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி! கலைஞர் அவர்கள் சபையில் பேசும்போது அறிஞருக்கு அறிஞராகவும் கவிஞருக்கு கவிஞராகவும் பாமரருக்கு பாமரராகவும் பேசுவார். கலைஞர் அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி, எம்ஜிஆர்கள் உருவாகி இருப்பார்கள். மக்கள் சேவையுடன் தந்தையின் பெயரையும் முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பேசினார்.

MUST READ