Homeசெய்திகள்சினிமாதனுஷ் எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார் - ரஜினிகாந்த்

தனுஷ் எனக்காக இரண்டு கதைகளை வைத்திருந்தார் – ரஜினிகாந்த்

-

- Advertisement -
ஒட்டு மொத்த கோலிவுட் திரை உலகமும் இணைந்து கொண்டாடும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்து அதாவது வில்லன் வேடத்தில் நடித்தது முதல் இன்று ஹீரோவாக நடிக்கும் வரை அனைத்து காலத்திலும் அவரை சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருகிறார். இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அவரது மகளும் பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். தனுஷை வைத்து மூன்று மற்றும் கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா இன்று லால் சலாம் படத்தை இயக்கி இருக்கிறார்

லைக்கா நிறுவனம் லால் சலாம் திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் படத்தின் வெளியேறும் தள்ளிப்போனது. அதன்படி வரும் ஒன்பதாம் தேதி லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் நிரோஷா, கபில் தேவ் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக சென்னையில் நடைபெற்று முடிந்தது. அப்போது ரஜினி பேசியது இணையத்தில் தற்போது வயதாகி வருகிறது. அதாவது முதலில் தனது மகளின் திரைப்படத்தில் நடிக்கவே தயங்கினேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் தனக்காக இரண்டு கதைகளை வைத்திருப்பதாகவும் ஆனால் நான் சொன்ன காரணத்தை அவர் புரிந்து கொண்டு ஒதுங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது

MUST READ