Homeசெய்திகள்சினிமா100 நாட்களைக் கடந்த ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. 100 நாட்களைக் கடந்த ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!அதே சமயம் ரஜினி, டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக
தொடங்கப்பட்டு ஐதராபாத், திருவனந்தபுரம், நாகர்கோவில், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் மே மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்களைக் கடந்த ரஜினியின் 'வேட்டையன்' படப்பிடிப்பு!அதன்படி வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களைக் கடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தை 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

MUST READ