கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்திய திரை உலக்கையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் கர்நாடகாவில் மாபெரும் தேயிலை எஸ்டேட் அதிபரின் மகள் தான் ராஷ்மிகா பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஸ்மிகா கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மாடல் துறையை தேர்வு செய்தார். முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ராஷ்மிகாவின் முகம் வெளியே தெரிந்தது
இதைத்தொடர்ந்து கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் வெற்றி ராசிகாவை தெளிந்த சினிமாவிற்கு அழைத்து வந்தது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் அவர் நடித்த கீதகோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அவர் முன்னணி நடியாக மாறி இருக்கிறார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகும் ரெயின்போ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் உருவாகும் தி கேர்ள் பிரண்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளிானது. இதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த ராஷ்மிகா, எனக்கு இப்போது தான் ஏன் கேட்க கூடாது என தோன்றுகிறது. நான் தயாரிப்பாளரிடம் அதிக சம்பளம் கேட்பேன், அவர் ஏன் என கேட்டால், மீடியா தான் காரணம் என சொல்வேன் என்று தெரிவித்திருந்தார்.