ஆக்ஷன் அதிரடியான சிங்கம் அகெய்ன்…. காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவு…
- Advertisement -

கோலிவுட்டில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். ஆக்ஷன், அதிரடி கதைக்களத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிங்கம் பாகம் இரண்டு மற்றும் மூன்று வெளியானது. மூன்று பாகங்களிலும் சூர்யா, அனுஷ்கா ஜோடிகளாக நடித்திருப்பார்கள். சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார். ரோஷித் ஷெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார். சிங்கம் படத்தை போலவே, இந்தியிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சிங்கம் இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டன்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், சிங்கம் 2 படத்தை ரீமேக் செய்யாமல் புதிய கதையை வைத்து இப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் கலவையான விர்சனங்கள் பெற்றன. இதையடுத்து, மீண்டும் சிங்கம் அகெயன் என்ற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி.

இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் ரன்வீர் சிங், அக்ஷய் குமார் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். மேலும், தீபிகா படுகோன் மற்றும் கரீனா கபூர் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அங்கு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.