சாய் பல்லவி ஆக சிறந்தவர் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் மிக சிறந்த நடிகைகளில் சாய் பல்லவி முக்கியமானவர். தனது எளிமையான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக அவர் கவர்ந்துள்ளார். நடிப்பு மற்றும் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்று வருகிறார்.

சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கின்றார்.
இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சாய் பல்லவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் “நீங்கள் ஆக சிறந்தவர். கடவுள் உங்களுக்கு சிறந்த எல்லாத்தையும் கொடுக்கட்டும். நீங்கள் என் படத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன். படத்தின் பூஜையில் கலந்து கொண்டதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்