ஷாருக்கான் உடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி,தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இப்படம் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனையை படைத்து வந்தது.
உலகம் முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் குறிப்பாக தமிழகத்தில் 400கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வந்தது. படம் வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 240.47 கோடியும் மூன்றாவது நாளாக நேற்று 384.69 கோடி ரூபாயையும் வசூல் செய்தது இந்நிலையில் நான்காவது நாளில் உலகம் முழுவதும் 520.79 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து இத்திரைப்படம் கடந்த 2-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த திரைப்படத்தை ஒரு கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.