நடிகர் சிவகார்த்திகேயன், ஆரோமலே படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யூடியூபர் கிஷன் தாஸ். அதை தொடர்ந்து இவர் சிங்க், தருணம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் ‘ஆரோமலே’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர் பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்த நிலையில் அடுத்தது விஜே சித்து இயக்கி, நடிக்கும் ‘டயங்கரம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள ஆரோமலே திரைப்படம் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாரங் தியாகு இதனை இயக்கியுள்ளார். சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது ப்ரோமோஷன் உள்ளிட்ட பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ‘ஆரோமலே’ படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் கிஷன் தாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
SURREAL ❤️
Right from Vijay TV to Today, I have been the biggest fan of this man and today, the kindest SK na gave us his time and saw #Aaromaley ❤️
Not only did he enjoy the film, every word he said will be cherished by the entire team ❤️
Love you @Siva_Kartikeyan anna ❤️ pic.twitter.com/4ZWUz8WmTL
— Kishen Das (@kishendas) November 4, 2025
அதன்படி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் டிவியிலிருந்து இன்றுவரை நான் இவருடைய மிகப்பெரிய ரசிகன். அன்பான சிவகார்த்திகேயன் அண்ணா எங்களுக்காக நேரம் கொடுத்து ‘ஆரோமலே’ படத்தை பார்த்தார். அவர் படத்தை ரசித்தது மட்டுமல்லாமல் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் குழுவினரால் கொண்டாடப்படுகிறது. லவ் யூ சிவகார்த்திகேயன் அண்ணா” என்று குறிப்பிட்டுள்ளார்.


