நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் அயலான் எனும் திரைப்படம் வெளியானது. அடுத்தது சமீபத்தில் விஜயின் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் இவர், ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதனை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது இந்த அமரன் திரைப்படம்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதாவது, “அமரன் படத்திற்காக நான் கடினமாக உழைத்தேன். காஷ்மீருக்கு சென்று அங்கு ராணுவ வீரர்களுடன் தங்கி இருந்து மூன்று நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். அவர்களைப் பார்த்த பிறகு நான் இந்த படத்திற்காக கடினமாக உழைத்தேன் என்று சொல்லவே கூடாது” என்று ராணுவ வீரர்கள் நம் நாட்டுக்காக கடினமாக உழைப்பதை கண்டு நெகிழ்ச்சியுடன் அவர்களை பாராட்டியுள்ளார்.
- Advertisement -