spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!

பிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!

-

- Advertisement -
கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும், சினேகாவின் நடிப்பு பேசப்படும். கடந்த 2012-ம் ஆண்டு நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்து அவர்களின் காதல் தொடங்கியது. திரையுலகில் தற்போது நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சினேகா – பிரசன்னா தம்பதி. இந்த தம்பதிக்கு தற்போது 2 பிள்ளைகள் உள்ளனர்.

நடிகை சினேகா நடிப்பில் வெளியான இறுதி திரைப்படம் ஷாட் பூட் த்ரீ. இப்படத்தில் வெங்கட் பிரபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டு பக்கங்களிலும் இவருவரும் ஜொலித்து வருகின்றனர். இந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியில் தனது கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடுவராக இருந்தார் சினேகா.

அப்போது, வயதான தோற்றத்தில் ஒரு ஜோடி நடனமாடி கலக்கியது. இதை பார்த்துவிட்டு பேசிய நடிகர் பிரசன்னா, வயதான பிறகும் கூட இதேபோல, நான் சினேகாவுடன் இருக்க வேண்டும் என உருக்கமாக பேசினார். இதைக் கேட்ட நடிகை சினேகா மேடையிலேயே மனம் உருகி கண் கலங்கினார். இருவரின் காதலையும் அங்கிருந்தவர்கள் கண்டு நெகிழ்ந்து போயினர்.

MUST READ