Homeசெய்திகள்சினிமாசூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.... அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்!

சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…. அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்!

-

- Advertisement -

நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இருப்பினும் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.... அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்!அதில் ஒன்று தான் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. ஆகையினால் சூர்யா தரமான கம்பேக் கொடுக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார். அதன்படி தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது தவிர சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.... அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்!அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நட்ராஜ், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் நடிகர் சூர்யா இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் அதாவது வக்கீலாகவும், அய்யனாராகவும் நடிக்கிறார் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.... அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்! இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மே 10ஆம் தேதிக்குள் இந்த படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், அறிவிப்புகளையும் மே மாதம் முதல் எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ