Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'சூர்யா 45' ரிலீஸ்..... என்ன காரணம்?

அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் ‘சூர்யா 45’ ரிலீஸ்….. என்ன காரணம்?

-

- Advertisement -

சூர்யா 45 படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.... அடுத்த மாதத்திலிருந்து கொண்டாட்டம்தான்!

சூர்யா நடிப்பில் நேற்று (மே 1) உலகம் முழுவதும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் ‘கங்குவா’ படத்தின் தோல்விக்கு பிறகு இப்படம் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'சூர்யா 45' ரிலீஸ்..... என்ன காரணம்?அதன்படி சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, வழக்கறிஞராக நடிக்கிறார். அவருடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கி கோயம்புத்தூர், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் நீதிமன்றம் போன்ற செட் அமைக்கப்பட்டு கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகும் 'சூர்யா 45' ரிலீஸ்..... என்ன காரணம்? இதற்கிடையில் இந்த படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தை 2025 செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் ஓடிடி உரிமம் இன்னும் விற்கப்படாத காரணத்தால் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ