Homeசெய்திகள்சினிமாபடத்தின் கதையை வைத்து பழனி முருகனை வேண்டிய சூர்யா!

படத்தின் கதையை வைத்து பழனி முருகனை வேண்டிய சூர்யா!

-

- Advertisement -

நடிகர் சூர்யா, பழனி முருகனை தரிசனம் செய்துள்ளார்.படத்தின் கதையை வைத்து பழனி முருகனை வேண்டிய சூர்யா!சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அதேசமயம் இவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடிக்கிறார். இதன் பின்னர் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் கதையை வைத்து பழனி முருகனை வேண்டிய சூர்யா!படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.படத்தின் கதையை வைத்து பழனி முருகனை வேண்டிய சூர்யா! இந்நிலையில் நடிகர் சூர்யா, வெங்கி அட்லுரி ஆகிய இருவரும் படக்குழுவினருடன் இணைந்து பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோயிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட சூர்யாவும், வெங்கி அட்லுரியும் படத்தின் கதையை வைத்து முருகனை வேண்டிக் கொண்டனர். மேலும் கோயிலில் சூர்யாவை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ