- Advertisement -
மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா 43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு டி இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். திஷா பதானி படத்தில் நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை என மாறி மாறி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
