Homeசெய்திகள்சினிமாமதுரை அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா43 முதல்கட்ட படப்பிடிப்பு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா43 முதல்கட்ட படப்பிடிப்பு

-

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் சூர்யா 43 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு டி இமான் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. இதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். திஷா பதானி படத்தில் நாயகியாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானல், தாய்லாந்து, சென்னை என மாறி மாறி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கங்குவா படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இது சூர்யாவின் 43-வது திரைப்படமாகும். படத்தில் மலையால நட்சத்திரங்கள் துல்கர் சல்மான், நஸ்ரியா நாசிம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவும் படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தி அறிவிப்பு அண்மையில் வௌியானது. படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் பணியாற்றிய ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார். இது ஜிவிக்கு 100-வது திரைப்படமாகும். இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க உள்ளது. இதனால், கல்லூரியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

MUST READ