spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்- ஜெயம் ரவி அறிவிப்பு

தனி ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும்- ஜெயம் ரவி அறிவிப்பு

-

- Advertisement -

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் படம் திரைக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது.

மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். ‌ இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring

மேலும், நல்ல வசூலையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வருகிறது.

இதில் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இவர்களின் கூட்டணியே மீண்டும் இணையும் என்று சில வருடங்களாகவே கூறப்பட்டு வந்தது.

மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி தங்களின் அடுத்தடுத்த படங்களில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதனால், ரசிகர்களை நேரிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் சந்தித்த ஜெயம் ரவி வெகு விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் கதை தயாராகிவிட்டது. மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் நான் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க நானும் இயக்குனர் மோகன் ராஜாவும் திட்டமிட்டோம்.

அப்பொழுது நாங்கள் வெவ்வேறு படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததால் எங்களால் இப்படம் பற்றி சம்பந்தமான பணிகளில் ஈடுபட முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது.

தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெகு விரைவில் உருவாககும் என்று உறுதியளிக்கிறேன் மற்ற தகவல்களை விரைவில் மோகன் ராஜா அறிவிப்பார் என்று கூறினார்.

MUST READ