“தி கேரளா ஸ்டோரி” சமூக அமைதிக்கு சவால் விடும் படம்
பல்வேறு சர்ச்சை, எதிர்ப்புகளுக்கு மத்தியில் “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம் வெளியிடப் படுகிறது.
கேரளா முதல்வர் எதிர்ப்பு
“தி கேரளா ஸ்டோரி” என்ற படம் சுதிப்டோ சென் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் காட்சி வெளி வந்த போதே, இது வகுப்பு வாதப்படம், கேரளா அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் பிரணாயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படத்தை இந்திய அளவில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் பல்வேறு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்த படத்தின் ட்ரைலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகைகள் எதிர்ப்பு
“தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மோசமான சிந்தனை வாதியால், மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள, மோசமான திரைப்படம் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்து, முஸ்லீம், கிரிஸ்டின் என்று பல மதங்களின் அடையாளங்களுடன் வாழும் மாநிலத்தில் அந்த மக்களிடையை வெறுப்புணர்வை தூண்டி சமூக அமைதியை சீர்குலைக்க எடுக்கப்பட்ட வெற்றுக் கூச்சலே “தி கேரளா ஸ்டோரி” என்று அந்த நாளேடு கண்டித்துள்ளது.
இந்து,கிரிஸ்த்துவ அப்பாவி பெண்களை தவறான முஸ்லீம் ஆண்களால் ஏமாற்றி அலைகழிக்கப்படுவதாக அந்த படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாளேடு விமர்சித்துள்ளது.
செவிலியர் கல்லூரியில் சேர்ந்து படிக்க செல்லும் 4 பெண்களை ஆசிஃபா என்ற முஸ்லீம் பெண், ஹிஜாப் அணிந்தால் தான் ஆண்களின் தவறான பார்வையில் இருந்து தப்ப முடியும் என்றும் அல்லாவை தவிர மற்றக் கடவுள்கள் எல்லாம் பலவீனமானவர்கள் என்றும் மூளை சலவை செய்வதாக அந்த படத்தில் காட்சி அமைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிஃபாவின் பேச்சில் மற்ற மூன்று பெண்களும் மயங்கி தவறான பாதையில் செல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் உள்ள பெண்களிடம் மூளை சலவை சாத்தியமா? என்ற அடிப்படை கேள்வி எழுகிறது.
அதேபோன்று “தி டைம்ஸ் ஆப் இந்தியா” சிக்கலான விஷியத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குனர் பார்வையாளர்களின் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தும் காட்சியை புகுத்தியிருக்கிறார் என்று எழுதியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள உரையாடல்கள், காட்சி அமைப்புகள் மோசமாக இருக்கிறது என்று அந்த நாளிதழ் கண்டித்துள்ளது.
மேலும், இந்த படத்தைப் பர்க்கும் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களின் அமைதியை இந்த படம் நிச்சயம் சீர்குலைக்கும் என்று “தி டைம்ஸ் ஆப் இந்தியா” விமர்சனம் செய்துள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள இந்துத்துவா ஆதரவு நாளேடுகளும், நடுநிலை ஏடுகளும் “தி கேரளா ஸ்டோரி” படத்தை விமர்சித்தும், கண்டித்தும் எழுதி உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை
“தி கேரளா ஸ்டோரி” படம் திரைக்கு வந்தால் சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் இந்தப் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
சீமான் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில், “தி கேரளா ஸ்டோரி” என்ற படம் இஸ்லாமிய சமுதாயத்தை இழிவு படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். அந்த படத்தை திரையிட்டாள் அதன் விளைவுகளை இந்த அரசு சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் “தி கேரளா ஸ்டோரி” வெளியிடும் தியேட்டர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் 13 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது.
ஒரு படம் வெளியில் வந்தால் சமுதாயத்தின் அமைதியை சீர்குலைக்கும் என்று ஊடகங்கள் எச்சரிக்கிறது. அரசாங்கத்தின் உளவுத்துறை எச்சரிக்கிறது. சமுதாயத்தின் மீது அக்கறை உள்ள அமைப்புகள் எச்சரிக்கிறது. ஆனால் நம்மை ஆளும் மத்திய, மாநில அரசுகள் அதுபோன்ற படங்களை வெளியிடுவதற்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று அறிவித்துள்ளது.