Homeசெய்திகள்சினிமாதீபிகா படுகோன் - ரன்வீர் சிங் ஜோடிக்கு வாரிசு... பரவும் தகவல்...

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடிக்கு வாரிசு… பரவும் தகவல்…

-

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட்டில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகும் இருவரும் பாலிவுட்டில் பிசியாக தனித்தனியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு பதான், ஜவான் திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தம்பதி திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை என இணையத்தில் இணையவாசிகள் கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், தற்போது தீபிகா படுகோன் கர்ப்பமாக உள்ளதாகவும், விரைவில் இருவரும் பெற்றோராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

MUST READ