Homeசெய்திகள்சினிமாதேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!

தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!

-

- Advertisement -

தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடக்க காலத்தில் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த இவர் பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். முதல் படமான காக்கா முட்டை படத்திற்காக சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்னும் பிரிவில் தேசிய விருதும் பெற்றார். அதைத் தொடர்ந்து குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற தரமான படங்களையும் இயக்கி புகழ்பெற்றார். மதுரை அருகில் உள்ள உசிலம்பட்டியில் உள்ள எழில் நகர் தான் இவரது சொந்த ஊராகும். இப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அந்த மர்ம நபர்கள் கடைசி விவசாயி படத்திற்காக வென்ற தேசிய விருதுகளையும் பதக்கங்களையும் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய விருது பெற்ற தமிழ் படத்தின் இயக்குனர் வீட்டில் கொள்ளை!இது சம்பந்தமாக
உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல இயக்குனரின் வீட்டில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இயக்குனர் மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ