இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என காலத்தால் அழியாத படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய படங்கள் பெரும்பாலும் சமூக கருத்துக்களை சொல்லும் விதத்தில் இருக்கும். அதாவது சமூகத்தில் சொல்லத் தயங்கும் விஷயங்களை தைரியமாக தனது படங்களின் மூலம் சொல்லி இருப்பார் மாரி செல்வராஜ். குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசப்பட்டிருந்தது. எனவே பலரும் மாரி செல்வராஜை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் மாரி செல்வராஜுக்கு எதிராக எழுந்த அத்தகைய விமர்சனங்களுக்கு வாழை திரைப்படம் பதில் கொடுக்கும் என்று மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் தான் வாழை. இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
“#Vaazhai was the movie, which I longed to take in my entire Career❣️. Those who bashed during Maamannan, have apologized me after watching Vaazhai🫶. Many have Criticized that why I’m taking a particular type of Cinema, Vaazhai will be answer for all🤝”
pic.twitter.com/ANxhUm9UfG— AmuthaBharathi (@CinemaWithAB) August 20, 2024
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மாரி செல்வராஜ், “வாழை திரைப்படம் எனது வாழ்க்கையில் நான் இயக்க ஆசைப்பட்ட படம். மாமன்னன் படத்தின் போது என்னை திட்டியவர்கள் வாழை படத்தைப் பார்த்த பின்பு என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள். நான் எதற்காக ஒரு குறிப்பிட்ட வகை சினிமாவை இயக்குகிறேன் என்ற கேள்விக்கு வாழை திரைப்படம் பதிலாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.