நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், ஹீரோயினாகவும் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் கடந்த ஜூலை மாதம் நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி. இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பிற்கு ரஜினி, திரிஷா போன்றோர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து தனது கணவருடன் திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் வரலட்சுமி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார், தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதாவது, “அவர் பார்க்க தான் முரட்டுத்தனமாக இருப்பார். ஆனால் அவர் உண்மையில் குழந்தை மனம் படைத்தவர். நிக்கோலாய்க்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் புரிந்து கொள்வார். தற்போது அவருக்கு நான் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் முரட்டுத்தனமாக இருந்தாலும் நான் தான் அதை கற்றுக் கொடுக்கிறேன்…. கணவர் குறித்து வரலட்சுமி!
-
- Advertisement -