Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் 'வாடிவாசல்'.... அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் படப்பிடிப்பு?

வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் ‘வாடிவாசல்’…. அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் படப்பிடிப்பு?

-

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் 'வாடிவாசல்'.... அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் படப்பிடிப்பு?

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அடுத்தது இவர் இயக்கத்தில் விடுதலை 2 எனும் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சூர்யாவை வைத்து வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இருப்பினும் நீண்ட நாட்களாக இந்த படமானது தொடங்கப்படாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் 'வாடிவாசல்'.... அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் படப்பிடிப்பு? நடிகர் சூர்யாவும் தற்போது கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சூர்யா-45 படத்திலும் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது. வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் 'வாடிவாசல்'.... அடுத்த ஆண்டு எந்த மாதத்தில் படப்பிடிப்பு?அதன்படி வாடிவாசல் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான செட் ஒர்க் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ