இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான விசாரணை, அசுரன், விடுதலை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இவரது இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படம் உருவாகியிருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாணு இயக்க உள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் நடிகர் சூர்யா, மாடுபிடி வீரர்களுடன் பல பயிற்சிகளையும் மேற்கொண்டார். இதற்கிடையில் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்த அமீர், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
#VetriMaaran Recent 👀
– We are going to start shooting for #Vaadivaasal in May or June.
– Pre-production work is currently underway.
– #Suriya46 May Month Shoot
– #Vaadivaasal May Or June la Start#Suriya #RETRO
pic.twitter.com/irXH2oW0Ym— Movie Tamil (@MovieTamil4) February 28, 2025
இந்நிலையில் தான் சமீபத்தில் விழா மேடை ஒன்றில் பேசிய வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் 2025 மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.