Homeசெய்திகள்சினிமாகலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்... கிளம்பியது புதிய சர்ச்சை

கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்… கிளம்பியது புதிய சர்ச்சை

-

சென்னையில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் நடிகர் விஜய் பங்கேற்காததால், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில், கலைஞர் 100 என்ற பெயரில் பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இதற்கான ஒப்புதழும் கிடைத்தது. அதன்படி கடந்த மாதம் 24-ம் தேதி கலைஞர் 100 நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது. எனினும் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சி இந்த மாதத்திற்கு தள்ளிப் போனது.

கலையை அரசியலாகவும் அரசியலை கலையாகவும் மாற்றியவர்..... கலைஞருக்கு புகழாரம் சூட்டிய தனுஷ், சூர்யா!

இதையடுத்து, நேற்று சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் 100 விழா கோலாகலமாக நடைபெற்றது. வெகு விமரிசையாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில், திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி, தனுஷ், அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாஸ், சிவராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நடிகை ரோஜா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு கலைஞர் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

'கலைஞரிடம் எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சாற்றலும் உண்டு'..... கலைஞர் 100 விழாவில் நடிகர் ரஜினி!

ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதி அளித்திருந்த நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார் இதில் பங்கேற்க வில்லை. இதனால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. உறுதி அளித்தபிறகு விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் பலர் வசைபாடி வருகின்றனர்.

MUST READ