இந்தி மொழி குறித்த கேள்வி… கடுப்பான விஜய் சேதுபதி….
- Advertisement -
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதியிடம், இந்தி குறித்த கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து, அவர் கோபம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரம் விஜய் சேதுபதி. நாயகனாக மட்டுமன்றி வில்லனாகவும் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஜவான் படம், காந்தி டாக்ஸ் தொடருக்கு பிறகு நடிகர் விஜய்சேதுபதி பாலிவுட்டில் அடுத்து நடித்துள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். கத்ரினா கைஃப்புடன் இணைந்து விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளார். இதனால், இத்திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது.

‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்து உள்ளார். ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோரும் நடித்து உள்ளனர். இது தவிர தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு, ராஜேஷ் வில்லயம்ஸ் ஆகியோரும் நடித்து உள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இந்தி மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, விஜய் சேதுபதியிடம் ஹிந்தியை படிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு கோபம் அடைந்து பதில் அளித்த விஜய் சேதுபதி, ஏன் எல்லோரிடமும் இதே கேள்வியை கேட்கிறீர்கள், என்னிடம் இதை கேட்பதில் என்ன பலன் உண்டு. நாங்கள் ஹிந்தியை படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என விளக்கம் அளித்தார்.