மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், அதே இடத்தில் பொதுமக்களுக்க உணவு வழங்கினார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தில் மட்டுமல்லாது விஜயகாந்தின் இல்லத்திற்கும் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
#Vishal & #Arya Served food in #Captain’s Memorial
— CINE Talk (@talk_cinetalk) January 9, 2024
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது நண்பரும் நடிகருமான ஆர்யாவும் சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இருவரும் சேர்ந்து அன்னதானம் வழங்கினர்.
நடிகர் சங்கத் செயலாளர் #Vishal இன்று (09.01.2024) கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.#CaptainVijayakanth #Vijayakanth… pic.twitter.com/DNvoADTb9S
— Cinema Calendar (@CinemaCalendar) January 9, 2024