Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால் - ஆர்யா

விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய நடிகர் விஷால் – ஆர்யா

-

மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஷால், அதே இடத்தில் பொதுமக்களுக்க உணவு வழங்கினார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவிடத்தில் மட்டுமல்லாது விஜயகாந்தின் இல்லத்திற்கும் சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது நண்பரும் நடிகருமான ஆர்யாவும் சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இருவரும் சேர்ந்து அன்னதானம் வழங்கினர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விஷால், கலையுலகம் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல மனிதர் எனப் பெயர் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கிறார்களோ இல்லையோ, பாரத தேசத்தில் உள்ள அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள், இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

MUST READ