spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடி. ராஜேந்தர் குரலில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்..... லேட்டஸ்ட் அப்டேட்!

டி. ராஜேந்தர் குரலில் உருவாகும் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

விஷால் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, அபிநயா செல்வராகவன் சுனில் ஒய் ஜி மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் படம் உருவாகி வருகிறது.

டைம் டிராவல் கேங்ஸ்டர் திரைப்படமான இந்த படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பது போன்று உருவாகி வருகிறது. அதாவது 1970 மற்றும் 1990களில் நடப்பது போன்று தயாராகி வருகிறது. மேலும் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக விஷால் மார்க் ஆண்டனி படத்தின் டப்பிங் படங்களை தொடங்கினார்.

we-r-hiring

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஒரு பாடலான அதிருது மனமே எனத் தொடங்கும் பாடல் பிரபல இயக்குனரும் நடிகருமான  டி ராஜேந்தர் குரலில் உருவாகி வருகிறது. மேலும் மார்கண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ