Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா? .... வெளியான புதிய தகவல்!

சூர்யாவின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா? …. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

சூர்யாவின் அடுத்த படத்தின் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சூர்யாவின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா? .... வெளியான புதிய தகவல்!

சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா? .... வெளியான புதிய தகவல்!இதற்கிடையில் நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போகிறார் என சமீபகாலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படமானது மாருதி கார்களின் புகழ்பெற்ற 796CC என்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான கதைக்களமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிப்பதற்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. சூர்யாவின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகளா? .... வெளியான புதிய தகவல்!தற்போது மற்றுமொரு நடிகை இப்படத்தில் இணைய உள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடிகை நிதி அகர்வால் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ