Homeசெய்திகள்க்ரைம்காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!

காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!

-

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு தகராறு செய்த காரணத்திற்காக எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது மதுபான பாரில் தகராறு செய்த நபருக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் தகராறு செய்த காரணத்திற்காக அஜய் வாண்டையாரை தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவர் இ சிஆர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது அவரது இருக்கையின் பக்கத்து இருக்ககையில் மது அருந்தி கொண்டிருந்த செல்வா என்கிற நபர் மது போதையில் பாரில் இருந்தவர்களை தொந்தரவு செய்துள்ளார்.

செல்வா மதுபான பாரில் தொந்தரவு செய்து கொண்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த ராஜா அமைதியாக இருக்கும் படி கூறி கண்டித்துள்ளார். ஏற்கனவே மது போதையில் தொந்தரவு செந்துவந்த செல்வா,  ராஜா அமைதியாக இரு என்று கூறியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் தாக்கியுள்ளார். இதனால் காயம் அடைந்த ராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மதுபான பாரில் நடந்த சம்பவம் குறித்து அதன் மேலாளர் வெங்கட் என்பவர் புகார் அளித்திருந்தார் புகாரில் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் என ராஜா, கணேஷ் குமார், பிரேம், பிரசாத், தீபக், தனசேகர், ஜானகிராமன் மற்றும் மேலும் சிலர் என அதில் குறிப்பிட்டு அளித்த புகாரியின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் மேலே குறிப்பிட்ட நபர்கள் மீது நடந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் செல்வா என்பவரால் தாக்குதலுக்கு உள்ளாகிய ராஜா என்பவரை நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!

ராஜாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படை இளைஞர் அணி செயலாளரும் நடிகருமான அஜய் வாண்டையார் மற்றும் சுனாமி சேதுபதி என்கிற நபர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்று காவல்துறையினர்  உடன் தகராறு செய்துவிட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் உடன் தகராறு செய்த காரணத்திற்காக முக்குலத்தோர் புலிப்படை இளைஞர் அணி செயலாளர் அஜய் வாண்டையார் கைது செய்ய நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட அஜய் வாண்டையார் தேனியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை தேனிக்கு சென்று போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அஜய் வாண்டையார் விசாரணைக்காக தேனியில் இருந்து சென்னைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட காரணத்திற்காக மூன்று பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஈடுபட்ட நபருக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் காவலர்களிடம்  தகராறில் ஈடுபட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…

MUST READ