Homeசெய்திகள்க்ரைம்தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

-

- Advertisement -

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சர்வதேச தொடர்புகளைக் கொண்ட கும்பலை ஆந்திரப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தென்னிந்திய மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

we-r-hiring

ஆந்திர மாநிலம் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை 44-ல் கார் ஒன்றை வழிமறித்த கொள்ளையர்கள், அதில் பயணித்த இருவரை கடத்தி ரூ.2.8 கோடி பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதேபோன்று கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மாமில்லபள்ளி அருகே ரூ.3 கோடி பணத்துடன் சென்ற மற்றொரு காரையும் வழிமறித்து கொள்ளையடித்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், குற்றவாளிகள் போலி வாகன பதிவு எண்கள் மற்றும் போலி ஆவணங்களின் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தாமல் ரொக்கமாக பணம் செலுத்தி வந்ததும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

இதையடுத்து கர்னூல், மதனப்பள்ளி, பெங்களூரு மற்றும் சேலம் இடையேயான சுங்கச்சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் கும்பல் உறுப்பினர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். இந்த கொள்ளை கும்பலின் தலைவராக செயல்பட்ட சிரில் மேத்யூ, கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி இழப்பால் கடனில் சிக்கியதாகவும், அதிலிருந்து மீள்வதற்காக பணத்துடன் பயணம் செய்பவர்களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிரில் மேத்யூ, 21 பேர் கொண்ட கும்பலை அமைத்து நேபாளத்தில் இருந்து விஓஐபி தகவல் தொடர்பு வசதிகள் மூலம் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சிரில் மேத்யூ, கே.ஏ. ஷியாபுதீன் மற்றும் கரிபால் ஆசிப் அகமது ஆகியோர் மார்ச் 15 அன்று கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ஷரத் பி.சி., அப்பு கே.எம்., ஸ்ரீகாந்த், அபு நிஷாத், நிஷாத் வி.எஸ்., முனீர் மற்றும் ஷினோஜ் உள்ளிட்டோர் பெங்களூரு – கோரண்ட்லா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அகோரி ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளை குறிவைத்து கொள்ளை – 21 பேர் கும்பல் கைது

அவர்களிடமிருந்து ரூ.1 கோடி 26 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ கார், இன்னோவா மற்றும் எக்ஸ்யூவி வாகனங்கள், 13 மொபைல் போன்கள், கத்திகள், பேப்பர் ஸ்ப்ரே, போலி பதிவு எண்கள் மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் இந்த கும்பல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கும்பலில் தொடர்புடைய மீதமுள்ள 11 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டெய்னருக்குள் ரகசிய அறை – 717 கிலோ கஞ்சா கடத்திச் சென்ற கும்பல் கைது

MUST READ