spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!

காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!

-

- Advertisement -

காதலிக்க மறுத்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

sexual abuse

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஸ்ரீபுரந்தான் குமிளந்துறை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான அஜித் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி தொடர்ந்து காதலுக்கு மறுப்பு தெரிவித்துவந்துள்ளார். இந்நிலையில் அஜித் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

we-r-hiring

இது குறித்து அந்தப் பெண் தனது பெற்றோரிடம் நடந்தததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தாயார் இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அஜித்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். அப்போது மாணவியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அஜித்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ