ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு பெறுவது எப்படி ?
தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வர் காப்பீடு திட்டத்தை போல் மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் யோஜனா பாரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 17 ஆயிரம் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியா முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இந்த சேவையை பெறலாம். இதய அறுவை சிகிச்சைகள், மன ஆரோக்கியம், பல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
முதலில் healthid.ndhm.gov.in என்ற மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்றதும் create ABHA number என இருக்கும். அதை பெற உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாக கொடுக்கலாம்.
ஆதார் எண்ணை வைத்து உள்நுழையும் போது உங்களுடயை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். இதன் மூலம் உங்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையை பெறலாம், பின்னர் அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மொத்தம் 1,354 சிகிச்சைகளுக்கு இந்த காப்பீட்டு திட்டதைதை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.