Homeசெய்திகள்இந்தியாமவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!

மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்திய 5 பேருக்கு நடந்த பயங்கரம்..!!

-

பிரபல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மவுத் ஃபிரெஷ்னரை எடுத்து உபயோகித்த 5 நபர்கள் ரத்த வாந்தி எடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி குருகிராமில் இருக்கும் லாஃபோரெஸ்டா என்கிற 3 ஸ்டார் ஹோட்டலுக்கு அங்கித் குமார் என்பவர் மனைவி, நண்பர்களுடன் சென்றிருந்தார். வழக்கம்போல சாப்பிட்டுவிட்டு அனைவரும் கடையில் இருந்த மவுத் ஃபிரெஷ்னரை பயன்படுத்தி உள்ளனர்.

சிறுதி நேரத்தில் அனைவருக்கும் வாயில் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட ஆரம்பித்துள்ளது. அப்போது பெண் ஒருவர் ‘எரிகிறது’ ‘எரிகிறது’ என்று கூச்சலிட்டுக் கொண்டே ரத்த வாந்தி எடுத்துள்ளார். பலருக்கும் இதே சம்பவம் நடந்தை அடுத்து, உடனடியாக குருகிராம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்கித் குமார் மற்றும் அவருடன் வந்த நபர்கள் பயன்படுத்திய mouth freshenerஐ கொண்டுபோய் மருத்துவரிடம் காட்டியுள்ளனர். அதை பார்த்த டாக்டர், “இதை பயன்படுத்தினா, பயன்படுத்திய நபர் இறந்துவிடக் கூடும்” என்று அதிரிந்துபோய் கூறியுள்ளார்.

உடனடியாக பிரச்னையை உணர்ந்த காவலர்கள் பாதிக்கப்பட்ட 5 பேரை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவர்களுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் உணவகத்தின் உரிமையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. அதில் வாயில் ஏற்பட்ட எரிச்சலால் அவதிடையும் போது நாக்கை காட்டுக்கின்றனர். அதில் பல கீறல்கள் இருக்கின்றன. அதை தொடர்ந்து தான் பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்கு போன் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

MUST READ