மத்திய பிரதேச மாநிலத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசென்ற பேருந்தில் தீ. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
கவுலா என்ற இடத்திலிருந்து முல்தாய்க்கு செல்லும் வழியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் திடீரென தீ பிடித்தது.மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் நேற்றிரவு வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

கோலா கிராமம் அருகே இரவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, பேருந்தில் ஏற்பட்ட தீப்பொறியே காரணம் என தெரியவருகிறது. வாகனம் முற்றிலுமாக தீயில் கருகின, இருப்பினும் அனைத்து வாக்குச்சாவடி ஊழியர்களும் ஓட்டுநரும் காயமின்றி வெளியேறியதாக பெதுல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர சூர்யவன்ஷி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நான்கு வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சேதமடைந்தன மற்றும் இரண்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன என கூறப்படுகிறது
பெதுல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சேதமடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையில், இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளதாக ஆட்சியர் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு தேவையா என்பது குறித்த முடிவு ஆணையத்திடம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தின்போது , 36 பணியாளர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேரியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.