Homeசெய்திகள்இந்தியாஉம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

-

உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Image

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாம் குஜராத் முதல்வராக இருந்த போது கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நினைவுகூர்ந்துள்ளார் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொது வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கேரள முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்ட எளிமையான தலைவரை நாம் இழந்துவிட்டோம். தாம் குஜராத் முதல்வராக இருந்த போதும், பின்னர் பிரதமராக பதவி வகித்த போதும், கேரள முதல்வராக பதவி வகித்த உம்மன் சாண்டியுடன் பல நேரங்களில் உரையாடியது குறித்து நான் நினைவுகூர்கிறேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரின் துயரத்தில் நான் பங்குகொள்வதோடு, எனது எண்ணங்கள் அவர்களுடன் உள்ளது. அவரது சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ