- Advertisement -
புதுச்சேரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட குலோத்துங்கன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் தலைமைச் செயலர் உட்பட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குளத்துங்கனை புதுச்சேரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டு தனது பணிகளை தொடங்கினார்.