Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன - ராகுல் காந்தி!

இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!

-

"நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்"- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், இது காங்கிரஸ் கட்சியின் கணக்கை முடக்குவது குறித்த பேச்சு அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகத்தை முடக்கும் செயல். இப்போது இந்தியாவில் ஜனநாயகமே இல்லை. உலகின் மாபெரும் ஜனநாயக நாடு இந்தியா என்பது ஒரு மாபெரும் பொய். எங்களைத் தேர்தலில் இருந்து முடக்குவதற்காக இது செய்யப்படுகிறது.

உங்களின் மிக முக்கியமான சொத்து கொள்ளையடிக்கப்படுகிறது. உங்கள் அரசியலமைப்பு கொள்ளை அடிக்கப்படுகிறது. உங்கள் ஜனநாயக கட்டமைப்பு கொள்ளை அடிக்கப்படுகிறது. இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

MUST READ