spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!

-

- Advertisement -

 

தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு- ஜல்சக்தித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ள டி.கே.சிவக்குமார்!
File Photo

தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக, உடனடியாகத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!

தென்பெண்ணையாறு நதிநீர் பிரச்சனைத் தொடர்பாக, தீர்ப்பாயம் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதை தமது கடிதத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், வரும் ஜூலை 5- ஆம் தேதிக்குள் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நதிநீர் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதே சட்டத்தில் முதல் தேர்வு என்று கூறியுள்ள அவர், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கர்நாடக அரசுக்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பமே அமையவில்லை.

ஜல்சக்தித்துறைக் கூறியது போல் தென்பெண்ணை ஆறு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

“ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு வழங்கி வருகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்!

அவசரமாகத் தீர்ப்பாயம் அமைப்பது கர்நாடகாவின் நலனுக்கு எதிராக இருக்கும் என்றும், அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். தென்பண்ணையாறு விவகாரத்தில் தமிழக அரசின் புகாரில் தீர்வுக் காண வேண்டிய பிரச்சனை எதுவும் இல்லை. தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் குடிநீருக்கானவை என்றும், அவற்றிற்கே உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, தமிழகத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க 12 வார கால அவகாசம் வழங்க உச்சநீதிமன்றத்தில், ஜல்சக்தித்துறை முறையிட வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ