
தம்முடைய பரிந்துரையின்றி அமைச்சரை நீக்குவது வரம்பு மீறிய செயல் என்று ஆளுநருக்கு எழுதிய பதில் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவ்தாஸ் மீனா பதவியேற்பில் நெகிழ்ச்சியான நிகழ்வு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய பதில் கடிதத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014- ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட்டு, கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கான மரியாதையை தமிழக அரசு வழங்கி வருகிறது; மரியாதையாக நடத்துவதே தமிழ் கலாச்சாரம். அமைச்சரை நீக்குவதற்கோ, நியமிப்பதற்கோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதால், ஆளுநரின் உத்தரவு சட்ட ரீதியாக செல்லாது. சட்ட ரீதியாக அணுகாமல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் எழுதிய கடிதத்திற்கு முதலமைச்சரின் பதில் கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.