Homeசெய்திகள்இந்தியாபழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்

பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்

-

- Advertisement -

பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்

ஓங்கோலில் கொடூரம் பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Andhra

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இளைஞன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் மறப்பதற்குள் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த மோட்டா நவீன் மற்றும் அஞ்சி என்கிற மன்னே ராமாஞ்சனேயலு ஆகிய இருவரும் திருட்டுகளில் ஈடுபடும் பழைய குற்றவாளிகள்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மது குடிக்க நவீனை கிம்ஸ் மருத்துவமனை பின்புறம் அழைத்துச் சென்றார். மது அருந்திய அஞ்சி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீனை தாக்கி ரத்தம் வரும் வரை அடித்துள்ளனர். நவீனின் வாயில் சிறுநீரை ஊற்றி குடிக்க வைத்தனர். இந்த கொடூரத்தை உடன் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ