Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..... மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!

-

- Advertisement -

 

22 மாநிலங்களுக்கு ரூபாய் 7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி!
File Photo

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா 2 வரை..

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவற்றை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு, 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 01- ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த அறிவிப்பு அமலுக்கு வரும். அகவிலைப்படி உயர்வால் ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

அயலான் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… வந்தது புதிய அப்டேட்…

இந்த அகவிலைப்படி உயர்வுக் காரணமாக, அரசுக்கு கூடுதலாக ரூபாய் 12,869 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ