
நாடு முழுவதும் பதுக்கல்களைத் தடுக்க வர்த்தகர்கள் இரண்டாயிரம் டன்களுக்கு அதிகமாக கோதுமைகளை கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிச்சந்தையில் கோதுமையின் விலை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க, இந்த நடவடிக்கையை மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்டது.

டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!
கடந்த ஜூன் மாதம் 12- ஆம் தேதி அன்று கோதுமையின் கையிருப்பு மூன்றாயிரம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், விற்பனை அங்காடிகள் ஆகியவை இரண்டாயிரம் டன் கோதுமை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை
தேவையான அளவு கோதுமை கையிருப்பு இருந்தாலும், சிலர் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.