வரலாறு காணாத விலை உயர்வை எட்டிய பிறகு, தங்கத்தின் விலை இன்று மீண்டும் ஒருமுறை கடுமையாக சரிந்துள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டால், வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மேலும் சரிவை சந்திக்கலாம்.
இன்று டெல்லியின் தங்க மார்கெட்டில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.700 குறைந்து ரூ.90,550 ஆக இருந்தது.மூன்று வருட கால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நேற்று சவூதி அரேபியாவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கையால் இந்த விலை சரிந்தது..
வெள்ளிக்கிழமை 99.9 சதவீத தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.91,250 ஆக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து, 99.5 சதவீத தூய தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.700 குறைந்து ரூ.90,100 ஆக இருந்தது.
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உக்ரைனும், அமெரிக்காவும் விவாதித்ததைத் தொடர்ந்து, புவிசார் அரசியல் அபாயங்கள் தணிந்ததால், நேற்று தங்கத்தின் விலைகள் சாதனை உச்சத்திலிருந்து குறைந்தன. இருந்தபோதும், காசா பகுதியில் ஹமாஸ் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியதால், மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான சொத்தாக தங்கத்திற்கான தேவை வலுவாக உள்ளது.
வெள்ளி விலை வெள்ளிக்கிழமை விலை கிலோவுக்கு ரூ.1,00,300 இலிருந்து ரூ.200 அதிகரித்து ரூ.1,00,500 ஆக உயர்ந்தது. சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கும் நிலையில், தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.22 சதவீதம் உயர்ந்து 3,028.90 டாலராக இருந்தது.